சென்னையை உலுக்கிய ஆணவக்கொலை.. படுகொலை செய்யப்பட்ட காதலன்.. ஷாக்கில் கோமாவுக்கு சென்ற காதலியும் மரணம்

Update: 2024-04-23 05:47 GMT

சென்னையில் ஆணவக்கொலையால் தனது கணவனை இழந்து, மன உளைச்சலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை, பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீன் என்பவரும், ஜல்லடியான்பேட்டை பகுதியை சேர்ந்த ஷர்மிளா என்பவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத்தொடர்ந்து, சர்மிளாவின் அண்ணன் தினேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரவீனை வெட்டி படுகொலை செய்தார். இந்த ஆணவக்கொலையால், மனஉளைச்சலுக்கு உள்ளான ஷர்மிளா, கடந்த மாதம் 14ஆம் தேதி, தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கோமா நிலைக்கு சென்ற ஷர்மிளாவுக்கு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஷர்மிளா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஆணவக்கொலையால் ஒரு காதல் தம்பதியின் வாழ்க்கை பறிபோனது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்