பிரிந்து சென்ற மனைவிக்கு 2-வது திருமணம் - உறவினருக்கு விழுந்த சரமாரி வெட்டு.. கடைசியில் கம்பி எண்ணும் கணவர்

Update: 2024-05-04 02:37 GMT

சென்னையில் பிரிந்து சென்ற மனைவிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்த உறவினரை சரமாரியாக வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார். சென்னை ராணி அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த பாலசுப்பிரமணியம் மனைவியின் தங்கை சிந்து என்பவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவரை வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரம் அடைந்த முதல் கணவர் முகமது உசேன் பாஷா தனது நண்பர்களுடன் வந்து பாலசுப்ரமணியனை பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டார். கொலை முயற்சி வழக்காக பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார் முகமது உசேன் பாதுஷா உள்பட 3 பேரை கைது செய்து சிறையில அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்