தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கின்றன.

Update: 2022-05-08 01:13 GMT
தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கின்றன. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியே செலுத்தாமல் உள்ள 50 லட்சம் பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஒரு கோடியே 48 லட்சம் பேரும் உள்ளனர். மேலும், 2-வது தடவை தடுப்பூசி செலுத்திவிட்டு 9 மாதம் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்கள் என சுமார் 2 கோடி பேருக்கு மேல் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில், தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, இன்று 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன. முகாம் காலை 7 மணிமுதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 300 இடங்களில் முகாம் நடக்கிறது. தமிழகம் முழுவதும் நடக்கும் முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்