தமிழிசையை அவதூறாக விமர்சித்த வழக்கு... ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாக விமர்சித்த, நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

Update: 2022-01-23 02:37 GMT
தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாக விமர்சித்த, நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக  தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த 2017ல் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை விமர்சனம் செய்து பேசியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி நாஞ்சில் சம்பத் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்