மின்கம்பங்களில் கட்டிவைக்கப்பட்டிருந்த துணிகள்.. "கொள்ளையர்களின் அடையாளக் குறிப்பா ?" - பொதுமக்கள் அச்சம்

Update: 2024-04-27 14:12 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே, மின்கம்பங்களில் தொடர்ச்சியாக பழைய துணிகள் கட்டி வைக்கப்பட்டிருப்பது பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது. தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மின்கம்பங்களில் பழைய துணிகள் தொடர்ச்சியாக கட்டி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கொள்ளையர்கள் தங்கள் அடையாளத்திற்காக பழைய துணிகளை கட்டி வைத்துள்ளனரா என கேள்வி எழுப்பி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்