ரயில்வே மேஸ்திரி தற்கொலைக்கு முன்பு வீடியோ பதிவு - உயர்அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

விருதுநகர் அருகே ரயில்வே மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

Update: 2021-10-22 03:06 GMT
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் லிங்கம். இவரது மனைவி விஜயலட்சுமி, மகள்கள் லாவண்யா, ராஜேஸ்வரி. ரயில்வேயில் மேஸ்திரி ஆக பணிபுரிந்த லிங்கம், கடந்த 13ம் தேதி வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற அவர் அடுத்த நாள் மருத்துவமனையில் உயிரிழந்தார். தற்கொலை செய்வதற்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவிட்ட அவர் அதில், தற்கொலைக்கு மேலதிகாரியான ரமேஷ் மற்றும் பாலமுருகன் காரணமென கூறியுள்ளார். மன உளைச்சல் மற்றும் அதிக பணிசுமையை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் கணவர் பதிவிட்ட வீடியோவை ஆதாரமாக கொண்டு உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி லிங்கத்தின் மனைவி, மகள்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்