மலைச்சாலையில் சென்ற முதியவர் - ஒற்றை யானை பலமாக தாக்கியதில் பலி

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம், மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-07-21 08:30 GMT
நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே மாவனல்லா பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ். மசினகுடியில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு, மாவனல்லா நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மூங்கில் செடிகளுக்குள் மறைந்திருந்த ஒற்றைக் காட்டு யானை, இருசக்கர வாகனத்தை கண்டதும் துரத்தி தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் இருதயராஜ் பலத்த காயமும், இருசக்கர வாகனம் முழுமையாக சேதமடைந்தது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், யானையை காட்டுக்குள் விரட்டி படுகாயமடைந்த இருதயராஜை, மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். இருதயராஜ்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட சில மணி நேரத்தில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 
Tags:    

மேலும் செய்திகள்