தமிழக அரசின் புதிய தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பதவியேற்பு

தமிழக அரசின் 47-வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

Update: 2021-02-01 04:08 GMT
தமிழக அரசின் 47-வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இருக்கையில் அமர்ந்து தனது பணியை ராஜீவ் ரஞ்சன் தொடங்கினார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் 1985 ஆம் ஆண்டு ஐஏஎஸ் ஆக தேர்வானார். தமிழக அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் சிறப்பு செயலாளராகவும், மீன்வளம் கால்நடை மற்றும் பால்வள அமைச்சக செயலாளராகவும் பணியாற்றியவர்.  
Tags:    

மேலும் செய்திகள்