10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

தமிழகத்தில் வரும்10 ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-08-05 10:37 GMT
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் 50 வயதுக்கு குறைவானவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், உடற்பயிற்சி கூடங்கள் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழக உடற்பயிற்சி கூட உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்