மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபர்... ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்

Update: 2024-04-30 03:50 GMT

இராஜபாளையம் பகுதியை சேர்ந்த மைனர் என்பவர், இராஜமங்கலம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாலதிக்கும், துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த மைனர் இருவரையும் கண்டித்த நிலையில், தகாத உறவு தொடர்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மைனர், தனது தம்பி பாண்டியராஜனுடன் சேர்ந்து, சரவணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், சரவணனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொலையாளிகளை பிடிக்கக்கோரி, அங்கிருந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்