கட்டாயப்படுத்தி 100 % கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி 100 சதவீத கட்டணங்களை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Update: 2020-08-03 13:41 GMT
தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி 100 சதவீத கட்டணங்களை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்த ஏற்படுத்தியிருக்கும் திட்டம் தமிழகம் முழுவதும் 95 சதவீத மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேவையான சைகை மொழி மூலமாக பாடத்தைக் கற்றுத் தருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் செங்கோட்டையன் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்