தடையை மீறி மதுரையில் கபடி போட்டி - வைகை ஆற்றில் திரண்ட நூற்றுக்கணக்கானோர்

ஊரடங்கு தடையை மீறி மதுரை வைகை ஆற்றில் கபடி போட்டி நடைபெற்றது.

Update: 2020-07-25 14:07 GMT
ஊரடங்கு தடையை மீறி மதுரை வைகை ஆற்றில் கபடி போட்டி நடைபெற்றது. செல்லூர் மேம்பாலம் அருகிலுள்ள வறண்ட வைகை ஆற்றில் நடந்த போட்டியில்,10க்கும் மேற்பட்ட அணி வீரர்கள் பங்கேற்றனர். காட்டுத் தீ போல் வேகமாக தகவல் பரவியதை தொடர்ந்து, அங்கு திரண்ட நூற்றுக்கணக்கானோர் கபடி போட்டியை பார்வையிட்டனர். சமூக இடைவெளியின்றி,  முகக்கவசம் அணியாமல் பொது இடத்தில் கபடி போட்டி நடைபெற்ற விவகாரம் மாநகராட்சி மற்றும் மாவட்ட அதிகாரி இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்