நாகை துறைமுகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள் - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்

நாகை துறைமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மீன்பிடி படகுகளுக்கான மானிய டீசலின் அளவை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் மீனவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-24 16:47 GMT
நாகை துறைமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மீன்பிடி படகுகளுக்கான மானிய டீசலின் அளவை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் மீனவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய மீனவர் பேரவை சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்கள் கையில் கருப்புக் கொடியை ஏந்தியவாறு முழக்கங்கள் எழுப்பினர்.  செருதூர், நம்பியார்நகர் உள்ளிட்ட 5 கிராம மீனவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்