நெல்லை மர்ம மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்... வெளியான ஆதாரம்

Update: 2024-05-08 05:17 GMT

நெல்லை மர்ம மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்... வெளியான ஆதாரம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் கை, கால்கள் இரும்பு கம்பியால் கட்டப்பட்ட நிலையில், மீட்கப்பட்டதாக புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த 2ஆம் தேதி மாயமானதாக சொல்லப்பட்ட நிலையில் 4ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இதனிடையே சடலமாக ஜெயக்குமார் மீட்கப்பட்ட போது அவரின் உடலில் இரும்பு கம்பிகள் கட்டப்பட்டிருப்பது போன்ற படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரின் தலை, கை, கால்கள் உள்ளிட்ட இடங்கள் கம்பியால் சுற்றப்பட்டிருக்கும் போது ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதனிடையே இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் விசாரணையும் வேகமெடுத்திருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்