பிரபல ரவுடியின் வீட்டிலிருந்து துப்பாக்கிகள் பறிமுதல்... பயங்கரவாத தடுப்பு படையினர் விசாரணை

Update: 2024-05-08 04:58 GMT

கேரளாவின் ஆலுவா அருகே வசித்து வந்த பிரபல ரவுடி ரியாஸ் வீட்டிலிருந்து இவையனைத்தையும் கைப்பற்றிய போலீசார், கூடவே 9 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். இந்த ரியாஸ், கொச்சி பியூட்டி பார்லர் துப்பாக்கிச்சூடு வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி அனஸின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தகக்து. ரியாஸை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று ரியாஸின் வீட்டிலிருந்து போலீசார் பயங்கர ஆயுதங்களை கைப்பற்றி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ரியாஸின் கூட்டாளியான அல்தாப் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்து ரிவால்வர் கேஸ் உள்ளிட்ட சில பொருள்களை பறிமுதல் செய்த நிலையில், இருவரிடமும் பயங்கரவாத தடுப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்