கொரோனாவுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பலி - 27 குண்டுகள் முழங்க உடல் தகனம்
கொரோனாவுக்கு உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 27 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொரோனாவுக்கு உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 27 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 11ஆம் தேதி குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.