எதிர்பாராத நேரத்தில் திடீர் என்ட்ரி... அடித்து நொறுக்கிய மழை... மகிழ்ச்சியில் உறைந்த கன்னியாகுமரி

Update: 2024-04-30 04:12 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கன்னியாகுமரி மற்றும் பத்மநாபபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்