சென்னை பப்பில் இளம்பெண்ணை ஒருமையில் திட்டி தாக்கிய பவுன்சர்.. தீயாய் பரவும் வீடியோ

Update: 2024-04-30 04:11 GMT

சென்னையில் தனியார் நட்சத்திர ஓட்டலின் பவுன்சர் இளம்பெண்ணைத் தாக்கிய விவகாரத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பரின் பிறந்த நாளை கொண்டாட சகோதரி, மற்றும் நண்பர்களுடன் நந்தனத்தில் உள்ள தனியார் பப்பிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த பவுன்சர் யோகேஷ் என்பவர், அவர்களை உள்ளே விட மறுத்து ஒருமையில் பேசி, இளம் பெண்ணைத் தள்ளிவிட்டுள்ளார். காயமடைந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் பெண்களை துன்புறுத்துதல், ஆயுதங்களால் தாக்குதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்