கண்ணில் மிளகாய் பொடி தூவி...துணியால் கட்டிப்போட்டு.. - உடன் வேலை பார்த்த பையன் செய்த காரியம்

Update: 2024-04-30 04:14 GMT

பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி நகைகளை பறித்துச் சென்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். காரணம் பேட்டை அருள்ஜோதி நகரில் வசித்து வரும் சரண்யா, வீட்டில் தனியாக இருந்த போது, பட்டப்பகலில் வீடு புகுந்த 2 பேர், கண்ணில் மிளகாய் பொடியை தூவி, துணியால் கட்டிப்போட்டு, 3 சவரன் நகையை பறித்து சென்றனர். இது குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், விசாரணையில், சரண்யா வேலை பார்த்த கடையில் பணிபுரிந்து வந்த தாமரைக்கண்ணன் மற்றும் லோகராஜ் ஆகியோர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்த‌து. தொடர்ந்து அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்