வெறிச்செயலில் ஈடுபட்ட 67 வயது மூதாட்டி.. பலியான 58 வயது கொழுந்தன்

Update: 2024-04-30 04:01 GMT

மதுபோதையில் தகராறு செய்த 58 வயது கொழுந்தனை கழுத்தறுத்து கொலை செய்த 67 வயது மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்து உள்ள வன்னிக்கோட்டையை சேர்ந்தவர் மலைராஜ்.

இவரது மனைவி உயிரிழந்த நிலையில் மகள் மற்றும் மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அருகே உள்ள வீட்டில் வசிக்கும் தனது மூத்த கோதரர் ராக்கப்பனுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மலைராஜ் ராக்கப்பனை தாக்க முயன்றபோது, ஆத்திரமடைந்த அவரது மனைவி கடம்பவனம் கத்தியை வைத்து மலைராஜை கழுத்தறுத்து கொலை செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்