ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீடு செய்வது எப்படி?" - மின்சார வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் எப்படி கணக்கிடப்படுகிறது என விளக்கி, எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-06-29 12:38 GMT
ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால் வீட்டு மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய தொகையின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் என அறிவித்திருந்தது. 
பின்னர் பயன்பாடு கணக்கீடு செய்யப்பட்டு மீதித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது,
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,  வீடுகளில் மின் அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள முடியாவிட்டால் முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க விதிகள் உள்ளதாக கூறப்பட்டது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் எப்படி கணக்கீடு செய்யப்படுகிறது என விளக்கமளித்து 
எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யும்படி, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கும் , மனுதாரருக்கும் உத்தரவிட்டனர்
Tags:    

மேலும் செய்திகள்