மாறும் வானிலை... வெயிலுக்கு ரெஸ்ட் கொடுத்து இடி, மின்னலுடன் அடிக்க போகும் கனமழை

Update: 2024-05-07 14:09 GMT

தென்னிந்தியாவில் வரும் நாட்களில் வெப்ப அலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியப் பகுதிகளில் இன்று வெப்ப அலை வீச வாய்ப்பு இருப்பதாகவும், வரும் நாட்களில் வெப்ப அலை படிப்படியாகக் குறையும் எனவும் கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், நாளை முதல் வருகிற மே 10ம் தேதி வரை ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்திய பிரதேசப் பகுதிகளில் புதிதாக வெப்ப அலை வீச வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் தென்னிந்தியப் பகுதி மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளில் வருகிற மே 11 ஆம் தேதி வரை இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்