தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்குகளின் விவரங்கள்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சி.பி.ஐக்கு மாற்றப்பட்ட வழக்குகளின் விவரங்களை தற்போது காணலாம்...

Update: 2020-06-29 02:14 GMT
கடந்த 2018ம் ஆண்டு கோயில் சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐக்கு மாற்றம் செய்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு மாற்றியது. 2019ம் ஆண்டு டிசம்பரில் , சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தான் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தை தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு 
உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்