ஒரு கிலோ செண்டுமல்லி ரூ.120 வரை விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி -

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பூ சந்தையில் செண்டு மல்லி பூக்கள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2020-06-20 09:40 GMT
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பூ சந்தையில் செண்டு மல்லி பூக்கள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  அப்பகுதியில் அதிக அளவில் பயிரிடப்படும் செண்டு மல்லி பூக்கள், சத்தியமங்கலம் பூ சந்தையில் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. அங்கிருந்து  தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஊரடங்கு காரணமாக கடந்த வாரம் வரை விலை வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில், தற்போது நல்ல விலை கிடைத்து வருகிறது. கடந்த வாரம் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையான செண்டுமல்லி தற்போது 120 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்