"ஊரடங்கில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்" - பொதுமக்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-05-20 02:55 GMT
ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்பவர்களை துன்புறுத்த கூடாது என உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் ரவி என்பவர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இது தொடர்பாக ஏற்கனவே காவல் துறை அதிகாரிகளுக்கு,  டிஜிபி  அனுப்பிய சுற்றறிக்கையின் நகல் அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் சமூக பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

அதை மீறுபவர்கள் மீது காவல்துறை சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்