சுகாதார ஆய்வாளரை தாக்க முயன்ற பொதுமக்கள்- கொரோனா சந்தேக நபர்களை வீடியோ எடுத்த‌தால் ஆத்திரம்

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்த கொரோனா சந்தேக நபர்களை வீடியோ எடுத்த சுகாதார ஆய்வாளரை பொதுமக்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-04-04 15:20 GMT
கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்த கொரோனா சந்தேக நபர்களை வீடியோ எடுத்த சுகாதார ஆய்வாளரை பொதுமக்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் அய்யனார் ஊத்து கிராமத்தை சேர்ந்த 11 மாத குழந்தை உள்பட 5 பேர் கொரோனா சந்தேகத்துடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களை அங்கிருந்த சுகாதார ஆய்வாளர் செல்போனில் வீடியோ எடுக்க முயன்றதால் ஆத்திரமடைந்த மக்கள் அவரை தாக்க முயன்றுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்