கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிறை கைதிகள் 51 பேர் சொந்த ஜாமினில் விடுவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட 51 கைதிகள் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-03-21 21:09 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட 51 கைதிகள் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்கள் சிறிய வழக்குகளில் கைதாகி இருந்த 74 பேர் சொந்த ஜாமின் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதன் படி, சிறைக்கு நேரில் வந்து விசாரணை நடத்திய 12  மாவட்ட நீதிபதிகள் 51 கைதிகளுக்கு ஜாமின் வழங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்