பணியின்போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் : உடலை சுமந்து சென்ற காவலர்கள்

பணியின் போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் உடல், 21 குண்டு முழங்க தகனம் செய்யப்பட்டது.

Update: 2020-03-19 20:57 GMT
பணியின் போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் உடல், 21 குண்டு முழங்க தகனம் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே வெங்கனூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார் மதியழகன். இரவு பணியில் ஈடுபட்டிருந்த இவர், இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது சொந்த ஊரான சூணாபுரி கிராமத்தில் நடந்த இறுதி சடங்கில் உதவி காவல் கண்காணிப்பாளர் பெரியய்யா உள்ளிட்ட காவலர்கள், மதியழகன் உடலை சுமந்து சென்றனர். இதையடுத்து 21 குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்