ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள் கொலை : கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனார்

சேலத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-02-18 20:42 GMT
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரம் நரிகரடை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு 19 வயதில் ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கூட்டுறவு நிறுவனத்தில் உர விற்பனையாளரான அறிவழகன், வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் அமுதா தனியாக இருந்துள்ளார். 

அப்போது வீட்டுக்கு அமுதாவின் மாமனார் பழனி வந்ததாக கூறப்படுகிறது. சற்று நேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென அமுதாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் அமுதா பிணமாக கிடந்துள்ளார். 

தம்மம்பட்டி காவல்நிலையத்திற்கு சென்ற பழனி, தன் மருமகளை கோடாரியால் வெட்டி கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்துள்ளார். 
அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை கூறி அதிரவைத்துள்ளார். 

திருமணமாகி வீட்டுக்கு வந்த முதல் நாளில் இருந்தே மருமகள் அமுதா மீது பழனிக்கு ஒரு கண் இருந்துள்ளது. எப்படியும் அவரை அடைந்தே தீருவது என சுற்றி வந்த அவருக்கு அமுதா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் அமுதா மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார் பழனி. 

இதனிடையே அமுதாவுக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் இருப்பதாக அரசல் புரசலாக வெளியான செய்தி மாமனார் பழனியின் காதுக்கும் சென்றுள்ளது. இதனால் ஆவேசமான பழனி, நேராக மகன் வீட்டுக்கு சென்று மருமகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மற்றவர்களோடு இணங்கும் நீ, என்னுடன் வர மறுப்பது ஏன்? என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போதும் அமுதா எதிர்ப்பு தெரிவித்ததால் கோபத்தின் உச்சியில் இருந்த பழனி, வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து அமுதாவை கொடூரமாக வெட்டி கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் இதுபோன்ற சிக்கல்களால் உயிர்கள் தான் காவு வாங்கப்படுகிறது... 

Tags:    

மேலும் செய்திகள்