பாலியல் லீலையில் சிக்கிய அண்ணன் மகன் - தண்டனை நிச்சயம்.. எச்சரித்த குமாரசாமி

Update: 2024-04-30 05:49 GMT

கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பாலியல் புகாருக்கு உள்ளான நிலையில், யார் தவறு செய்திருந்தாலும் தண்டனை பெற்றுத்தருவோம் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்...கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீது எழுந்துள்ள பாலியல் புகார்கள் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ரேவண்ணாவை கட்சியை விட்டு நீக்குமாறு மதசார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக எஸ்.ஐ.டி குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் குமாரசாமி, மாநிலத்தில் பெண்களுக்காக முதலில் தாங்களே குரல் கொடுத்து வருவதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தன்னையோ, தனது தந்தையையோ யாரும் சந்தேகப்பட வேண்டாம் என்றும், குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத்தருவோம் என்றும் கூறினார்....

Tags:    

மேலும் செய்திகள்