சிதம்பரம் : விளைநிலங்களில் புகுந்த முதலையால் அச்சம்

சிதம்பரம் அருகே விளைநிலங்களில் முதலை புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

Update: 2019-12-07 14:25 GMT
சிதம்பரம் அருகே விளைநிலங்களில் முதலை புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தவர்த்தான்பட்டு கிராமத்தில் 12 அடி நீளமும் 1000 கிலோ எடையும் கொண்ட முதலை ஒன்று விளைநிலங்களில் புகுந்ததாக தகவல் வெளியானது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் பொதுமக்கள் உதவியோடு முதலையை பிடித்தனர். இந்த பகுதியில் உள்ள ஆற்றில் ஏராளமான முதலைகள் இருப்பதாகவும், அதனை பிடிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்