"உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் முழுவீச்சில் செயல்பட வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் ஒன்றிய நகர கிளைச் செயலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Update: 2019-11-12 10:04 GMT
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் ஒன்றிய நகர கிளைச் செயலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல உள்ளாட்சி தேர்தலிலும் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என்றும், அதற்கு  கட்சி நிர்வாகிகள் முழுவீச்சில் செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார். அ.தி.மு.க. அரசின்  சாதனைகளை வாக்காளர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், அரசு நிறைவேற்றி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்