மழை நீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை பலி

மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-10-30 10:27 GMT
மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் அருகே ஒண்டிப்புலி நாயக்கனூரை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரின் 3 வயது மகன் உத்ரன், அதே ஊரில் உள்ள தனது தாத்தா மணிகண்டன் வீட்டுக்கு  சென்றுள்ளார். வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை வெகுநேரமாக காணாததால் குடும்பத்தினர் வீட்டைச் சுற்றி தேடியுள்ளனர். அப்பொழுது வீட்டின் அருகே, சுமார் 4 அடி ஆழம் கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் சிறுவன் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அதையடுத்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக குழந்தைகள் உயிரிழந்து வரும் நிலையில்  பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்