பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 19 ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

Update: 2019-10-24 14:34 GMT
அறிவியல், தகவல் தொழில் நுட்பத்தில் பயிற்றுவிக்கப்பட்ட இளம் தலைமுறையினர் விண்வெளி ஆராய்ச்சி துறையில் பணியாற்றி வருவது  தேசத்திற்கு கிடைத்த பெருமை என கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 19 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் பங்கேற்று பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பெரியார் பல்கலை கழக மேம்பாட்டிற்காக 23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்