நாங்குநேரி, விக்கிரவாண்டி வாக்கு எண்ணிக்கை : முகவர்களுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தல்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், முகவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என, அதிமுக அறிவுறுத்தி உள்ளது.

Update: 2019-10-22 14:07 GMT
நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், முகவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என, அதிமுக அறிவுறுத்தி உள்ளது. இடைத் தேர்தல் நடைபெற்ற இருதொகுதி வாக்குகளும் வரும் 24ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. அதையொட்டி, அதிமுக விடுத்துள்ள அறிக்கையில், முகவர்கள், வாக்கு எண்ணும் மையத்துக்கு முன்னதாகவே செல்லுமாறும், வாக்கு இயந்திரத்தில் உள்ள முத்திரை சரியாக உள்ளதா என்பதை கண்காணிக்குமாறும் கூறியுள்ளது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதும், அதனை சரிபார்த்துக் கொள்ளுமாறும், முடிவுகள் அறிவிக்கும் வரை வெளியில் வரக்கூடாது என்றும், முகவர்களை அக்கட்சி அறிவுறுத்தியுள்ளது. ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் செய்ய வேண்டிய இன்றியமையாத பணி இதுவென்றும், அதிமுக அறிக்கையில் கூறியுள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்