தொடங்கியது "நெத்திலி மீன்" சீசன் - மீனவர்கள் மகிழ்ச்சி
தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி உள்ளதால் நெத்திலி மீன்கள் அதிக அளவில் கிடைப்பதாக தூத்துக்குடி பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி உள்ளதால் நெத்திலி மீன்கள் அதிக அளவில் கிடைப்பதாக தூத்துக்குடி பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு பருவக்காற்று முடியும் வரையில் நெத்திலி மீன்கள் சீசன் இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து நெத்திலி மீன்களை துறைமுகம் கடற்கரை பகுதியில் கருவாடுக்காக காய வைக்கும் பணிகளை மீனவர்கள் தொடங்கி உள்ளனர்.