தாயை கொன்று தானே புகாரும் தந்து... போலீசுக்கே விபூதி அடித்த மருத்துவர்... கடைசியில் அதிர்ந்த ஊர்

Update: 2024-04-28 11:42 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியை சேர்ந்த ஜானகி என்ற மூதாட்டி கடந்த 2020-ம் ஆண்டு வீட்டில் ரத்தக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியும் மாயமாகி இருந்தது. இதுதொடர்பாக மூத்த மகன் பாரிராஜன் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கக் கோரி ஜானகியின் 2வது மகன் பாரதிதாசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி நாகை சிபிசிஐடி போலீசார் கடந்த 2023-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், சம்பவத்தன்று குடும்பத் தகராறில் தாய் ஜானகியை, சித்த மருத்துவர் பாரிராஜன் கட்டையால் தாக்கிக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க, ஜானகியின் தங்க சங்கிலியை கழற்றிச் சென்று, வழக்கை திசை திருப்ப நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பாரிராஜனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவ வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்