சுதந்திர தினத்தை ஒட்டி அமைச்சர்கள் பங்கேற்ற பொது விருந்து
சென்னை பாரிமுனை கச்சாலீஸ்வரர் கோவிலில் சுதந்திர தின பொது விருந்து விழா நடைபெற்றது.
இதுபோல, சென்னை பாரிமுனை கச்சாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பொது விருந்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவும்,காளிகாம்பாள் கோவிலில் நடைபெற்ற பொது விருந்தில் அமைச்சர் தங்கமணியும் பங்கேற்று, பொதுமக்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.மயிலாப்பூர் முண்டககன்னியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சமபந்தி விருந்தில், அமைச்சர் செல்லூர் ராஜூ, திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் சட்ட அமைச்சர் சண்முகம்,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், குடும்பத்தினருடன் பங்கேற்று பொதுமக்களுடன் அமர்ந்து, மதிய உணவு சாப்பிட்டனர்.சென்னை கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பொது விருந்தில், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்,சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில், போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர்,பொதுமக்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.