நாளை சுதந்திர தின விழா - கடலோரங்களில் தீவிர கண்காணிப்பு

நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாட உள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2019-08-14 10:13 GMT
நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாட உள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலூர் கடலோர காவல் படையினர் ஆய்வாளர் சங்கீதா தலைமையில் படகுகளில் ரோந்துப்பணி நடைபெற்றது. கடலில் ரோந்து சென்ற அதிகாரிகள், மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த மீனவர்களிடம் அடையாளம் தெரியாத நபர்கள், அல்லது படகுகள் தென்பட்டால் உடனடியாக கடலோர காவல்படை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினர். இந்த ரோந்துப்பணி நாளை வரை தொடரும் என கடலோர காவல் படையினர் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்