தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நியமன விவகாரம் :சம்பந்த அதிகாரிகளிடம் மனு அளிக்க உத்தரவு

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-08-13 10:22 GMT
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 2107-18 கல்வியாண்டு வரை ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் வல்லுனர் குழு அமைத்து விசாரிக்க கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அமர்வு, மனுதாரர் தரப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுவரை எவ்வித மனுவும் அளிக்காததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்