போர் போடும் போது விபத்து : மின்சாரம் தாக்கி இருவர் பலி-ஒருவர் படுகாயம்

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் போர் போடும் போது மின்சாரம் தாக்கி இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-08-09 02:15 GMT
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தேவகி என்பவருக்கு சொந்தமான வீட்டில் போர் போடும் பணி நடந்து வந்துள்ளது. அப்போது போர் போடும் இயந்திரம் திடீரென சாய்ந்த நிலையில், அதனை தடுப்பதற்காக சிவா என்பவர் கடப்பாரையை  கொண்டு முட்டு கொடுத்துள்ளார்.அப்போது  கடப்பாரை வழியாக தவறுதலாக மின்சாரம் பாய்ந்ததையடுத்து சிவா மற்றும் அருகே நின்று கொண்டிருந்த பாண்டி, முனியாண்டி ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். அதில், சிவா மற்றும் பாண்டி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த முனியாண்டி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்