கண்கூசும் மகனின் பாலியல் லீலை.. வக்காலத்து வாங்கி பேசும் தந்தை.. கடுப்பில் முடிவு கட்டும் தேவகவுடா

Update: 2024-04-30 03:03 GMT

கண்கூசும் மகனின் பாலியல் லீலை.. வக்காலத்து வாங்கி பேசும் தந்தை.. கடுப்பில் முடிவு கட்டும் தாத்தா தேவகவுடா

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்துள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். சிவமோகாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரஜ்வல் ரேவண்ணா தற்போது எம்.பி.யாக இருப்பதால், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் தேவேகவுடா தான் முடிவெடுக்க வேண்டும் என்றார். இன்று கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அப்போது, பிரஜ்வல் ரேவண்ணாவை சஸ்பெண்ட் செய்வது தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும் குமாரசாமி தெரிவித்தார்.

கர்நாடகாவில் பிரஜ்வல் ரேவன்னாவின் ஆபாச வீடியோ வழக்கு என்பது, அரசியல் சூழ்ச்சி என, அவரது தந்தையும் எம்எல்ஏவும் ஆன ரேவண்ணா கூறியுள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்