அறந்தாங்கி தொகுதியின் வளர்ச்சிக்கு எப்போதும் தாளம் போட தயார் : எம்.எல்.ஏ கோரிக்கையை ஏற்ற அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் அறங்தாங்கியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Update: 2019-07-23 02:31 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அறங்தாங்கியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி மாணவிகள் வில்லு பாட்டு பாடி அமைச்சருக்கு வரவேற்பளித்தனர். நிகழ்ச்சியில் பேசிய எம்எல்ஏ ரத்தின சபாபதி அறந்தாங்கி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி தர வேண்டும் என அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து பேசிய அமைச்சர், பள்ளி மாணவிகள் பாடிய வில்லுப்பாட்டுவிற்கு ஏற்றார்போல் அறந்தாங்கி தொகுதியின் வளர்ச்சிக்கு எப்போதும் தாளம் போட தயாராக இருப்பதாக கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்