சத்தியமங்கலம்: சாலையில் காட்டெருமைகள் சுற்றி திரிவதால் அச்சம்

சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனைச்சாவடியை ஒட்டிய சாலை பகுதியில் காட்டெருமைகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2019-07-09 08:13 GMT
சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனைச்சாவடியை ஒட்டிய சாலை பகுதியில் காட்டெருமைகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள விலங்குகள் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே காட்டெருமைகள்  சுற்றி திரிவதால் இரவு நேரங்களில் அவ்வழியே செல்வார் பயத்துடன் செல்கின்றனர். காட்டெருமைகளை காட்டுப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்