தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி : பதக்கத்துடன் திரும்பிய தமிழக வீரர்கள் உற்சாக வரவேற்பு

லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2019-06-25 21:04 GMT
லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் கடந்த 14ஆம் தேதி தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. போட்டியில் ஊட்டியை சேர்ந்த வீரர்கள் ஷாமலா, லோக்கேஷ்வரன், தமிழ்செல்வன் ஆகியோர் பங்கேற்று பதக்கம் வென்று அசத்தினர். இந்நிலையில் ஊர் திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்