திருமணமாகாத விரக்தி.. கொடூரமான செயலை கையில் எடுத்த குடும்பம்.. நாமக்கல்லில் பகீர் சம்பவம்

Update: 2024-04-29 14:02 GMT

நாமக்கல் அருகே, திருமணமாகாத விரக்தியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராசிபுரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் - வத்சலா தம்பதிக்கு, 40 வயதில் விமல் என்ற மகன் உள்ளார். திருமணமாகாத விரக்தியில் விமல் இருந்து வந்த நிலையில், அதிக கடன் தொல்லை காரணமாகவும் குடும்பத்தினர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே, விமல் தனது தாய், தந்தைக்கு குளிர்பானத்தில் ஆசிட் கலந்த கொடுத்துவிட்டு, தானும் உட்கொண்டுள்ளார். பின்னர் பயத்தில் 108க்கு போன் செய்து விமல் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழுவினர், 3 பேரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விமலின் தந்தை சந்திரசேகர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தற்போது சிகிச்சைப் பலனின்றி அவரது தாய் வத்சலாவும் உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்