சென்னை புறநகரான அனகாபுத்தூர் பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் விலை ரூ.10 : மக்கள் வேதனை

சென்னை புறநகரான அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது.

Update: 2019-06-18 22:59 GMT
சென்னை புறநகரான அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. நகராட்சி நிர்வாகங்களின் சார்பாக ஒருசில இடங்களில் மட்டும் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தனியார் லாரிகளில் கொண்டு வரப்படும் தண்ணீர் ஒரு குடம் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை பணம் கொடுத்து வாங்குவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் லாரிகளில் வரும் தண்ணீரை பிடிக்க வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாலும் சிரமமடைகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையை போக்கி முறையாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்