தங்க சங்கிலி இருந்தால் இலவச மாத்திரை கிடைக்காது என கூறி 80 வயது மூதாட்டியிடம் நூதன திருட்டு

மருத்துவமனையில் 80 வயது மூதாட்டி ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் நூதனமாக கொள்ளையடித்துள்ளார்.

Update: 2019-06-18 19:55 GMT
மருத்துவமனையில் 80 வயது மூதாட்டி ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் நூதனமாக கொள்ளையடித்துள்ளார்.நாகர்கோவிலை சேர்ந்த 80 வயது மூதாட்டி பீரும்மா என்பவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், மாத்திரை வாங்குவதற்காக வரிசையில் நின்றபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர்,  தங்க சங்கிலி அணிந்தால் மாத்திரை இலவசமாக தரமாட்டார்கள் என கூறியுள்ளார். இதையடுத்து, மூதாட்டி, தனது 3 சவரன் தங்க சங்கிலியை கழட்டியபோது, அதை மர்ம நபர் வாங்கி வைத்து கொண்டார். மேலும் ஆதார் அட்டையை காட்டினால் தான் மருந்து கிடைக்கும் எனவும் அந்த நபர் கூறியதால், மருந்தை மூதாட்டி தேடியபோது, மர்ம நபர் மாயமாகி விட்டார். சங்கிலி பறிபோனதால் கதறி அழுத மூதாட்டியின் நிலைமை பரிதாபத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக,  ஆசாரிப்பள்ளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்