அன்னசாகரம் ஏரியை தூர்வார கிராம மக்கள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் பகுதி அருகே 384 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது.

Update: 2019-06-18 19:43 GMT
தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் பகுதி அருகே 384 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை பெய்யும் போது பெருகும் தண்ணீரால்,சுற்று வட்டாரத்தில் உள்ள 18 கிராம மக்கள் பெரிதும் பயன் பெற்று வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக முறையாக தூர் வாரப்படாததால் ஏரி முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, ஏரி முட்புதராக காட்சியளிக்கிறது.  தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் விவசாயத்துக்கும், அன்றாட தேவைக்கும் தண்ணீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்