ராமேஸ்வரத்தில் ஹோட்டல் சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததாக புகார் : கர்ப்பிணி உள்பட 3 ஊழியர்கள் வாந்தி மயக்கம்

ராமேஸ்வரத்தில் ஓட்டலில் வாங்கிய உணவை சாப்பிட்ட நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2019-06-16 11:45 GMT
தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள தனியார் உணவகத்தில் வாங்கி வந்த உணவில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. உணவை முதலில் சாப்பிட்ட கர்ப்பிணியான கவிதா வாந்தி எடுத்ததை கண்ட சக ஊழியர்கள், உடனடியாக அவரை சிகிச்சைக்காக, ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதேபோல அந்த உணவை சாப்பிட்ட மேலும் இரு ஊழியர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இதனிடையே, உணவு வாங்கி வந்த மதன், சாம்பாரில் பல்லி கிடந்தது தொடர்பாக, தனியார் உணவகம் மீது நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்